என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி
- இன்று முதல் 3 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.
- பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தடைந்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று மாலை கவன்னியாகுமரி வந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
சாமி தரிசனத்திற்கு பிறகு, படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.
அங்கு, இன்று முதல் 3 நாட்களுக்கு அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடல் பகுதி முழுவதும் இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Next Story






