என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு
- கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பனும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் அருகே நல்லூத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பனும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது தொடர்பான விவரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.
Next Story






