search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு
    X

    பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.
    • வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு வரும் 19-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

    * விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் கட்சி தலைமையகத்தில் சேர்க்க வேண்டும்.

    * வரும் 19-ந்தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும்.

    * வேட்பாளர் விண்ணப்ப கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்திட வேண்டும்.

    * ரூ.2000 செலுத்தி, தி.மு.க. வேட்பாளருக்கான விண்ணப்ப படிவத்தை கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×