search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு சார்பில் பிரதமரை வரவேற்க சென்றேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
    X

    அரசு சார்பில் பிரதமரை வரவேற்க சென்றேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன்.
    • இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.

    சென்னை:

    மதுரையில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மதுரை வந்த பிரதமர் மோடியை அரசு சார்பில் வரவேற்க சென்றேன்.

    * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.

    * பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவுபோல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர் என்று கூறினார்.

    Next Story
    ×