search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வுக்கு ஓபிஎஸ் பல துரோகங்களை செய்தவர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
    X

    ஜெயக்குமார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.வுக்கு ஓபிஎஸ் பல துரோகங்களை செய்தவர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

    • நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக ஜெயக்குமார் பேட்டி
    • 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்கிறார்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை

    ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நிர்வாகிகள் கோரிக்கைக்கு இணங்க அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், 75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டதாகவும் கூறினார்.

    'அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்' என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

    சட்ட ரீதியாக இந்த கூட்டம் நடைபெற்றது என்றும், கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.

    Next Story
    ×