என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை மத்திய அமைச்சர் தாங்கி பிடிப்பது வெட்கக்கேடு- மு.க.ஸ்டாலின்
- சமீபத்திய குளறுபடியால் சமூக நீதி, சமநிலைக்கு எதிரானது நீட் என்பது நிரூபணமாகி உள்ளது.
- ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு உள்ளது.
சென்னை:
நீட் தேர்வில் அடுத்தடுத்து பல்வேறு முறைகேடுகள் அம்பலமாவதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரானது நீட் தேர்வு. ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.
சமீபத்திய குளறுபடியால் சமூக நீதி, சமநிலைக்கு எதிரானது நீட் என்பது நிரூபணமாகி உள்ளது.
தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் மோசடி. நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் அதன் அடிப்படையிலேயே சமத்துவமின்மை உள்ளதை எடுத்துக்காட்டுகின்றன.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிரானதாக நீட் தேர்வு உள்ளது.
அனிதா தொடங்கி இன்னும் எத்தனையோ மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம்.
குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை மத்திய அமைச்சர் தாங்கி பிடிப்பது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார்.






