என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபடுங்கள்: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு
- வங்கக் கடலில் அந்தமான் அருகில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறுகிறது.
- நிவாரண பணியில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2ம் தேதி முதல் 4-ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விட்டிருப்பதால் அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அரசு அதிகாரிகளின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகள் தத்தமது பகுதிகளில் இருந்து மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை செய்திட உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கான உணவு, உடை, மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிடும் வகையில் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.






