search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனிமொழி எம்.பி. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
    X

    கனிமொழி எம்.பி. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு - துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    • கனிமொழி எம்.பி வீட்டில் இருக்கும்போதே மர்ம நபர் ஒருவர் புகுந்ததாகக் கூறப்படுகின்றது.
    • இதனால் கனிமொழி எம்.பி. வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி. இவர் மக்கள் பணிக்காக தூத்துக்குடி குறிச்சி நகர் பகுதிகளில் தற்காலிகமாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

    இதற்கிடையே, கனிமொழி எம்.பி வீட்டில் இருக்கும்போதே மர்ம நபர் ஒருவர் புகுந்ததாகக் கூறப்படுகின்றது. இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. அலுவலக தரப்பினர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். தற்போது, தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கனிமொழி எம்.பி.யின் தூத்துக்குடி இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கனிமொழி எம்.பி வசிக்கும் வீட்டில் மர்ம நபர் புகுந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×