என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளச்சாராய பலி- கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபையின் இன்றைய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கள்ளக்குறிச்சிக்கு அவர் செல்ல உள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.
மேலும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






