search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தக்காளி விலை ரூ.200-யை நெருங்கியது: இல்லத்தரசிகள் கவலை
    X

    தக்காளி விலை ரூ.200-யை நெருங்கியது: இல்லத்தரசிகள் கவலை

    • சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்குகின்றனர்.
    • கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை.

    போரூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மேலும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. கோயம்பேடு மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதிக்கும் கீழ் குறைந்துவிட்டது. வழக்கமாக 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது கடந்த ஒரு மாதமாகவே 30 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று அதன் வரத்து மேலும் குறைந்து 28லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது. இதையடுத்து மொத்த விற்பனை கடைகளில் தக்காளி விலை மீண்டும் தாறுமாறாக உயரத்தொடங்கி இருக்கிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட இன்று மேலும் அதிகரித்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்கப்படுகிறது.

    இதனால் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலை கிலோ ரூ.200-யை நெருங்கி வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற கணக்கிலேயே வாங்குகின்றனர். மேலும் சமையலுக்கு தக்காளியை சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

    தக்காளி விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை. இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றார்.

    Next Story
    ×