என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா - முக கவசம் கட்டாயம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- தமிழ்நாட்டில் 469 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உயர்நீதிமன்றத்தில் முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 10 ஆயிரத்தை தாண்டியது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 469, புதுச்சேரியில் 104 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் இனி முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வரும் திங்கட்கிழமை முதல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
Next Story






