என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கனமழை: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயில்கள் ஆவடி- திருவள்ளூரில் இருந்து இயக்கம்
- வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- ரெயில் சேவை பாதித்துள்ளதால் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வியாசர்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாள பாதையில் மழை நீர் தேங்கியது.
வியாசர்பாடி, பேசின் பாலம் இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரூ செல்லும் ரெயில் ஆவடியில் இருந்து இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுகிறது.
ரெயில் சேவை பாதித்துள்ளதால் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நீர் வடிந்த பிறகே சென்ட்ரலில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்