search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
    X

    சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    • தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தி.நகர், முகப்பேர், கொளத்தூர், அண்ணாநகர், திருவான்மியூர், அம்பத்தூர், மயிலாப்பூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

    தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் இந்த சோதனை நடந்தது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    12 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

    இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சோதனைக்குள்ளாகி இருக்கும் தனியார் நிறுவனத்தின் அதிபர் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்றும் அவர் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

    இதேபோன்று பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×