search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரட்டை வேடம் போடும் கட்சி திமுக- எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்
    X

    இரட்டை வேடம் போடும் கட்சி திமுக- எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம்

    • மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
    • தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.

    திருவள்ளூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக கூட்டணி என்பது மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றனர்.

    திமுக எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக என்ன செய்தனர்? முதல்வர் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை விமர்சிக்கிறார்.

    இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. அதிமுகவையும், என்னையும் விமர்சிப்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையாக இருக்கிறது.

    திமுக மற்றும் கூட்டணியில் உள்ள 38 எம்பிக்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த திமுக 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் ?

    மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×