search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புயல் எச்சரிக்கை எதிரொலி- சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை
    X

    புயல் எச்சரிக்கை எதிரொலி- சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

    • புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.
    • மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    மிச்சாங் புயல் உருவானதை அடுத்து நாளை தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடக்கிறது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.

    இதனால், மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    Next Story
    ×