என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு
- ஒரு இடத்தில் நிலையான முகாமும் 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது.
- இதுவரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 38 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேர் பயன் அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.
சுமார் 1 லட்சம் முகாம்களில் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று வரையில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரத்து 942 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 11 லட்சத்து 63 ஆயிரத்து 277 பேரும் போடாமல் உள்ளனர்.
இதுவரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 38 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேர் பயன் அடைந்துள்ளனர்.
நாளை ஒரு வார்டுக்கு 17 இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் நிலையான முகாமும் 16 இடங்களில் நடமாடும் முகாமும் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடாமல் உள்ளவர்கள் பெயர் விவரம் சுகாதாரப் பணியாளர்களிடம் உள்ளதால் அவர்கள் அந்தந்த வீடுகளுக்கு சென்று முகாம் அருகில் நடைபெறுவதை கூறி தடுப்பூசி போட அழைக்க உள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசி அதிகம் போடாமல் உள்ள மாவட்டங்களில் ராணிப்பேட்டை முதல் இடத்திலும் (21 சதவீதம்), கன்னியாகுமரி 2-வது இடத்திலும்(18 சதவீதம்), 3-வது இடமான தேனி மாவட்டத்தில் 17 சதவீதம் பேரும் உள்ளனர்.
சென்னை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, கரூர், சேலம், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே முதல் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
மாவட்டம் வாரியாக தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
சென்னை -13,72,219
கோவை -6,23,576
கடலூர் -5,77,932
திருப்பூர் -5,66,197
செங்கல்பட்டு -6,30,294
சேலம் -5,67,315
திருச்சி -5,02,050
மதுரை -7,14,206
ஈரோடு -5,43,054
திருவள்ளூர் -4,82,295
விழுப்புரம் -2,98,783
நாமக்கல் -5,27,697
திண்டுக்கல் -3,02,242
விருதுநகர் -4,31,493
திருவாரூர் -3,91,499
தூத்துக்குடி -3,94,921
தஞ்சாவூர் -3,63,366
திருநெல்வேலி -4,55,472
காஞ்சிபுரம் -1,44,686
கிருஷ்ணகிரி -5,05,406
கன்னியாகுமரி -5,37,220
திருவண்ணாமலை -2,24,895
ராமநாதபுரம் -2,55,099
வேலூர் -1,90,043
தேனி -3,69,603
புதுக்கோட்டை -2,01,737
கள்ளக்குறிச்சி -1,77,922
திருப்பத்தூர் -3,77,157
சிவகங்கை -1,88,268
ராணிப்பேட்டை -3,47,526
அரியலூர் -76,631
மயிலாடுதுறை -2,00,624
நாகப்பட்டினம் -1,93,719
தர்மபுரி -2,59,910
தென்காசி -1,41,529
கரூர் -83,292
நீலகிரி -1,13,046
பெரம்பலூர் -64,510
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்