search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்தவில்லை- அன்புமணி ராமதாஸ்
    X

    வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்தவில்லை- அன்புமணி ராமதாஸ்

    • சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்.
    • துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "துல்லியமாக கணிக்க இயலாத சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூட வேண்டும்" என கூறினார்.

    அன்புமணியின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    இந்நிலையில், அன்புணி ராமதாஸ் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த விளக்கத்தில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்துவதற்காக எதையும் நான் கூறவில்லை.

    வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணிக்கவில்லை என்பது எனது ஆதங்கம்.

    வெளிநாடுகளில் உள்ளது போல் ஏன் நமது வானிலை ஆய்வு மையத்தால் துல்லியமாக கணிக்க முடியவில்லை.

    இனிவரும் காலங்களில் இன்னும் அதிகம் மழை, புயல், வெள்ளம் வரும். துல்லியமாக அறிவிக்கும் பட்சத்தில் தான், மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×