search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க அன்புமணி வலியுறுத்தல்
    X

    வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்க அன்புமணி வலியுறுத்தல்

    • தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுப்புவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்.
    • எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக வனத்துறையில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து காட்டுக்குள் மீண்டும் அனுப்புவதற்கான தனிப்படைகளை அமைக்க வேண்டும்; வனப்பகுதிகளின் பரப்பளவை குறைக்க வேண்டும். கோடைக்காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊர்களுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எந்தெந்த வனப்பகுதிகளில் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்கெல்லாம் விலங்குகளுக்கு தற்காலிக தண்ணீர் தொட்டிகளை திறக்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மனித மற்றும் விலங்கு மோதல் நிகழாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×