search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை- பா.ஜ.க துணைத் தலைவர் கரு. நாகராஜன்
    X

    அ.தி.மு.க. கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை- பா.ஜ.க துணைத் தலைவர் கரு. நாகராஜன்

    • கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.
    • சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் கரு.நாகராஜன் கூறியதாவது:-

    எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் வந்து சி.பா. ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியுள்ளோம்.

    தமிழகத்திற்கு ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு பத்திரிக்கையின் வாயிலாக அறிவொளி இயக்கம் நடத்துவதைப் போல் படிக்காத பாமரரையும் படிக்க வைத்த மிகப்பெரிய பெருமை ஆதித்தனாருக்கு உண்டு. அவர் புகழ் என்றென்றும் ஓங்கி உயர வேண்டும் என்றார்.

    கே: அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் அண்ணாமலைக்கு கட்சியில் நெருக்கடி இருக்கிறதா?

    ப: சிறப்பான தலைவர் சிறப்பான பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி முறிவால் அண்ணாமலைக்கு நெருக்கடி இல்லை. தேசிய தலைமை முடிவெடுத்த பின் முடிவு சொல்லப்படும்.

    கே: கூட்டணியில் பிளவு ஏற்பட்ட பின் கூட்டணி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனரா?

    ப: கட்சித் தலைவர்கள் அவர்களின் கட்சி சார்பில் முடிவெடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×