search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதானி விவகாரம் சென்னையில் 5 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- அடையாறில் தங்கபாலு பங்கேற்பு
    X

    அதானி விவகாரம் சென்னையில் 5 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- அடையாறில் தங்கபாலு பங்கேற்பு

    • சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னை:

    அதானி குழும முறைகேடு தொடர்பாகவும் அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்தது, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கியது தொடர்பாகவும் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் சென்னையில், எல்.ஐ.சி - எஸ்.பி.ஐ. வங்கி அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் அருகே ஜி.பி.சாலையில் உள்ள எல்.ஐ.சி.அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதில், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாநில செயலாளர்கள் எஸ்.ரஞ்சித் குமார், அயனாவரம் சரவணன் மற்றும் எஸ்.சி.துறை மாநில துணைத் தலைவர் புரசை வின்சென்ட், பொதுக்குழு உறுப்பினர் உமாபாலன், சூளை ராஜேந்திரன் பங்கேற்றனர்.

    தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடையாறு டி.துரை தலைமையில், அடையாறு சாஸ்திாி நகர், எஸ்.பி.ஐ வங்கி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    மாநில துணைத் தலைவர்கள் ஆர்.தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் சுபாஷினி, அமிர்தவர்ஷினி, மாநில செயலாளர் அனுசுயா, மாவட்ட துணைத் தலைவர்கள் திருவான்மியூர் பி.எல்.கதிரேசன், தரமணி மணி, தசரதன், விஷ்ணுகுமார், மாணிக்கவாசகம், அனுகிரகாகண்ணன், பக்திசிங், ஸ்டீபன் பங்கேற்றனர்.

    வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில், ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை சிக்னல் அருகே எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், பொதுச்செயலாளர் எஸ்.கே.வாசு, மாநில செயலாளர் மணிப்பால் மற்றும் ஆர்.கே.நகர் சையத், சக்தி, நாகேந்திரன், நஜ்மா ஷெரீப், வீரா செட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில், போரூர் எஸ்.பி.ஐ வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில், மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், பிரபாகரன், இலக்கியப் பிரிவு துணைத் தலைவர் ஆர்.பூங்கொடி, சாய்ராம், சுரேஷ், முரளி, பீர் முகமது, அம்பத்தூர் பிரகாஷ், கராத்தே ரவி, காமராஜ், மணி, ஆறுமுகம், மேஸ்திரி, மோகன் குரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெ.டில்லி பாபு தலைமையில், வியாசர்பாடி அம்பேத்கர் சட்டக் கல்லூரி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, இமயா கக்கன் உள்ளிட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×