search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி - நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
    X

    முதல்வர் ஸ்டாலின்

    சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி - நிதியுதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

    • காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
    • காவிரியில் மூழ்கி பலியானோர் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நீச்சல் தெரியாத பாண்டியராஜன், மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், முத்துசாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×