search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் அதிரடி கைது: ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல்
    X

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 39 பேர் அதிரடி கைது: ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல்

    • தாளவாடி போலீசார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீசார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாளவாடி மரூர், குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாளவாடி பகுதியைச் சேர்ந்த மாதவ சாமி மகன் மகேந்திரா (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவப்பா மகன் பிரவீன் குமார் (27), ரங்க சாமி மகன் புருஷோத்தமா (31), நாராயண மகன் ரங்க சாமி (40), குருசாமி மகன் மாதேஷா (38), ரங்கசாமி மகன் மூர்த்தி (31), பசுவ ண்ணா (32), சித்தமல்லு (30), சித்தமல்லு கௌதா (40), மாதேவா (33), ராமே கௌதா (55), மாதேஷ் (55), மாதேவா (60), குமார் (38), மாதவசாமி (46), நாகராஜப்பா (35), குருசித்தச்சாரை, வசந்த் (24), மாதப்பா (54), சங்கரப்பா (64) ஆகிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.90 ஆயிரத்து 70 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைபோல் தாளவாடி மல்லன்குழி, மல்குதிபுரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுப ட்டுக் கொண்டிருந்த தாள வாடி பகுதியைச் சேர்ந்த நாகேஷ் (39), மஞ்சுநாதா (44), பீரேஷ் (34), சன்மதா (35), அருள்ராஜ் (42), தண்ட பாணி (50), சிவகுமார் (33), திருப்பதி (60), ரங்கசாமி (58), ஜடேசாமி (69), கர்நா டகா மாநிலத்தைச் சேர்ந்த நந்திஷ் (44), சென்னிமலை பகுதியைச் சேர்ந்த அம்மா சியப்பன் (64), தாளவாடி பகுதியை சேர்ந்த மகதே வ்சாமி (45), பக்தவசலா (35), சிவசாமி (42), வெங்கட்ரா மன் (59), ரஞ்சனா நாயகா (56), ரமணா (37), சித்தராஜ் (29) ஆகிய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.39 ஆயிரத்து 930 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×