என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கர்ப்பம்- அதிகாரிகள் விசாரணை
Byமாலை மலர்4 Jun 2022 5:38 AM GMT (Updated: 4 Jun 2022 5:38 AM GMT)
சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்த போது அந்த தகவல் உண்மைக்கு மாறானது என்பது தெரியவந்தது.மேலும் அந்த சிறுமி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றதாகவும் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அந்த 14-வயது சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த சிறுமி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவர் சிறுமியை பலாத்காரம் செய்ததில் கருவுற்றதும் தெரியவந்துள்ளது. மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X