என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் 59 வேட்பாளர்கள், 4 நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 42 பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் 59 வேட்பாளர்கள், 4 நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 42 பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.
Next Story






