என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யாவின் குடும்பத்திற்கு அண்ணாமலை ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய காட்சி.
தற்கொலை விவகாரத்தில் அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?- அண்ணாமலை கேள்வி
By
மாலை மலர்31 Jan 2022 4:59 AM GMT (Updated: 31 Jan 2022 4:59 AM GMT)

ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
செந்துறை:
பள்ளி விடுதியில் தற்கொலை செய்த அரியலூர் மாணவி லாவண்யா சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவி லாவண்யாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா? மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க போராடும். பா.ஜ.க குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும். இந்த போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை. சகோதரி லாவண்யாவிற்கு நீதி கேட்டு போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மாணவி வீடியோவை அடிப்படையாக வைத்து பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய குரலை கொடுத்து வருகிறது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. போராடுகிறது.
ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் இது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மோசமாக கையாண்டுள்ளது, அற்புதமான காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
ஆதாரம் இல்லாமல் அனிதாவின் உடலை வைத்து அரசியல் செய்தது தி.மு.க.தான். நாங்கள் அப்படி செய்யவில்லை ஆதாரத்துடன் லாவண்யாவிற்கு நீதி கேட்கிறோம். அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி விடுதியில் தற்கொலை செய்த அரியலூர் மாணவி லாவண்யா சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவி லாவண்யாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மாணவியின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா? மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க போராடும். பா.ஜ.க குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும். இந்த போராட்டம் எந்த மதத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை. சகோதரி லாவண்யாவிற்கு நீதி கேட்டு போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மாணவி வீடியோவை அடிப்படையாக வைத்து பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய குரலை கொடுத்து வருகிறது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. போராடுகிறது.
ஆட்சியாளர்கள், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் பேசுவதால் நீதி கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் இது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு மோசமாக கையாண்டுள்ளது, அற்புதமான காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
ஆதாரம் இல்லாமல் அனிதாவின் உடலை வைத்து அரசியல் செய்தது தி.மு.க.தான். நாங்கள் அப்படி செய்யவில்லை ஆதாரத்துடன் லாவண்யாவிற்கு நீதி கேட்கிறோம். அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா?
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
