என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூரில் பதுங்கல்?- தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்21 Dec 2021 8:06 AM GMT (Updated: 21 Dec 2021 8:06 AM GMT)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்:
தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது. அதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.
அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 9 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். தமிழகத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் பதுங்கி உள்ளார் என்ற தகவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதியில் உள்ள ரிசார்ட், சொகுசு விடுதிகள் அதேபோல பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் உள்ளாரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் ஏமாற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டியது. அதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை தொடர்ந்து அவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.
அவரை பிடிக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 9 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். தமிழகத்தில் விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ளாரா என தனிப்படையினர் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் பதுங்கி உள்ளார் என்ற தகவல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதியில் உள்ள ரிசார்ட், சொகுசு விடுதிகள் அதேபோல பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளில் உள்ளாரா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X