search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு- முதலமைச்சர் உத்தரவு

    தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    * வடகிழக்கு பருவமழை, மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    * கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

    முக கவசம்

    * பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    * கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


    Next Story
    ×