என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியருக்கு கொரோனா- குழந்தை உள்பட 5 பேருக்கு தொற்று
Byமாலை மலர்6 Sep 2021 5:37 AM GMT (Updated: 6 Sep 2021 5:37 AM GMT)
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட முதல் 3 நாட்களுக்கு அறிகுறி மற்றும் பாதிப்பு ஆகிய காரணங்களால், சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
இதையடுத்து அந்த ஆசிரியர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், ஆசிரியர் சென்று வந்த வகுப்பறை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 50 பேருக்கும், அவரது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 4-ந் தேதி உறுதியானது.
இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆசிரியரின் மனைவி, 3 வயது மகள், 8 மாத ஆண் குழந்தை மற்றும் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.
அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும்.
அதனடிப்படையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை மூட பரிந்துரைக்கப்படும்” என தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட முதல் 3 நாட்களுக்கு அறிகுறி மற்றும் பாதிப்பு ஆகிய காரணங்களால், சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.
இதையடுத்து அந்த ஆசிரியர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், ஆசிரியர் சென்று வந்த வகுப்பறை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 50 பேருக்கும், அவரது குடும்பத்தில் உள்ள 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 4-ந் தேதி உறுதியானது.
இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஆசிரியரின் மனைவி, 3 வயது மகள், 8 மாத ஆண் குழந்தை மற்றும் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது.
அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆசிரியரின் சொந்த ஊரான வடமாத்தூர் கிராமத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரிடமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்று தெரியவரும்.
அதனடிப்படையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியை மூட பரிந்துரைக்கப்படும்” என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X