என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கலசப்பாக்கத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா

    கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கலசப்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொற்று உறுதியானதை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ குழுவினர் பள்ளியில் ஆசிரியர் உடன் பணிபுரிந்த சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் பரிசோதனை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

    Next Story
    ×