என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி அரசு பள்ளியில் எழுதிய குறிப்பை டுவிட்டரில் பதிவிட்ட கலெக்டர்
Byமாலை மலர்21 Jun 2021 2:31 AM GMT (Updated: 21 Jun 2021 12:08 PM GMT)
குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்த மு.கருணாநிதி அரசு பள்ளியில் எழுதி வைத்திருந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் கடந்த 16-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் கடந்த 16-ந்தேதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் அந்த பள்ளிக்கு வருகை தரும் முக்கிய நபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பள்ளி பற்றிய குறிப்புகள் எழுதி வைத்திருந்த குறிப்பேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
அதில், ‘இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்ப பாடச்சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107 பேரில் இன்று வருகை தந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்து போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதால் பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று. அன்புள்ள மு.கருணாநிதி’.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து இந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் இந்த குறிப்பேட்டின் தகவலை கலெக்டர் பிரபுசங்கர் படம் எடுத்து, அதனை நெகிழ்ச்சியுடன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் கடந்த 16-ந்தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து அவர் கடந்த 16-ந்தேதி கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் அந்த பள்ளிக்கு வருகை தரும் முக்கிய நபர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பள்ளி பற்றிய குறிப்புகள் எழுதி வைத்திருந்த குறிப்பேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது, ஒரு குறிப்பேட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, 1956-ம் ஆண்டு குளித்தலை எம்.எல்.ஏ.வாக இருந்தபோது இந்த பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து கைப்பட எழுதி இருந்த வாசகம் ஒன்று இடம் பெற்று இருந்தது.
அதில், ‘இன்று வேங்காம்பட்டி மாவட்ட மன்ற ஆரம்ப பாடச்சாலையை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107 பேரில் இன்று வருகை தந்தவர்கள் 71 பேர். இந்த பள்ளிக்கென கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் மேல் மரங்கள் உளுத்து போயிருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதால் பொதுமக்கள் பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் இன்னும் அதிகமாக கவனிக்கப்படுதல் நன்று. அன்புள்ள மு.கருணாநிதி’.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து இந்த குறிப்பேட்டினை பாதுகாப்பாக பராமரித்து பத்திரமாக வைக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பின்னர் இந்த குறிப்பேட்டின் தகவலை கலெக்டர் பிரபுசங்கர் படம் எடுத்து, அதனை நெகிழ்ச்சியுடன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X