என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டையில் சசிகலாவை வரவேற்க அமமுக தொண்டர்கள் குவிந்தனர்
Byமாலை மலர்8 Feb 2021 7:11 AM GMT (Updated: 8 Feb 2021 7:11 AM GMT)
சசிகலாவை வரவேற்க ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
வேலூர்:
பெங்களூரில் இருந்து இன்று காலை சசிகலா சென்னைக்கு புறப்பட்டார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக அவர் சென்னை செல்கிறார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பும் அவரை வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்க அ.ம.மு.க.வினர் திரண்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட எல்லை தொடக்கம் மற்றும் முடியும் இடங்களிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட எல்லையான வெலக்கல்நத்தத்தில் அ.ம.மு.க.வினர் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க குவிந்துள்ளனர். வாணியம்பாடி, ஆம்பூரிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர். ஆம்பூரில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சசிகலாவை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆட்டம், பாட்டத்துடன் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டு களைக்கட்டியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூட்டுத்தாக்கு, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி, வாலாஜா சுங்கச்சாவடி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பெரும்புலிம்பாக்கத்தில் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
செண்டை மேளம், டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், இசை நிகழ்ச்சிகள் என 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இதனையொட்டி வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் இருந்து இன்று காலை சசிகலா சென்னைக்கு புறப்பட்டார். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக அவர் சென்னை செல்கிறார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பும் அவரை வழிநெடுகிலும் உற்சாகமாக வரவேற்க அ.ம.மு.க.வினர் திரண்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட எல்லை தொடக்கம் மற்றும் முடியும் இடங்களிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட எல்லையான வெலக்கல்நத்தத்தில் அ.ம.மு.க.வினர் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க குவிந்துள்ளனர். வாணியம்பாடி, ஆம்பூரிலும் ஏராளமானோர் திரண்டுள்ளனர். ஆம்பூரில் சசிகலாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த மேடை மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சசிகலாவை வரவேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஆட்டம், பாட்டத்துடன் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டு களைக்கட்டியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூட்டுத்தாக்கு, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கல்லூரி, வாலாஜா சுங்கச்சாவடி, காவேரிப்பாக்கம், ஓச்சேரி, பெரும்புலிம்பாக்கத்தில் சசிகலாவை வரவேற்க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
செண்டை மேளம், டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, பொய்க்கால் குதிரை, புலியாட்டம், இசை நிகழ்ச்சிகள் என 8 வகையான கலை நிகழ்ச்சிகளுடன் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் பிற மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இதனையொட்டி வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X