என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு வரவேண்டாம்- சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை
Byமாலை மலர்31 Dec 2020 9:20 AM GMT (Updated: 31 Dec 2020 9:20 AM GMT)
புத்தாண்டு கொண்டாட தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
அதே நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டம் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி உறுதியாக நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
கவர்னர், முதல்-அமைச்சர் தரப்பு மோதலால் சர்ச்சை அதிகரித்தது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்று அரசின் முடிவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
அவர் பேட்டி அளித்த பிறகு வாட்ஸ்-அப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டை குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கொரோனா சூப்பர் பரவலின் ஒரு பகுதியாக இருக்காதீர்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனாவை சூப்பர் பரவலாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை எச்சரித்துள்ளது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி பதிவில் கூறியுள்ளார்.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
அதே நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டம் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி உறுதியாக நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
கவர்னர், முதல்-அமைச்சர் தரப்பு மோதலால் சர்ச்சை அதிகரித்தது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்று அரசின் முடிவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
அவர் பேட்டி அளித்த பிறகு வாட்ஸ்-அப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டை குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கொரோனா சூப்பர் பரவலின் ஒரு பகுதியாக இருக்காதீர்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனாவை சூப்பர் பரவலாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை எச்சரித்துள்ளது.
இவ்வாறு கவர்னர் கிரண்பேடி பதிவில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X