search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    புத்தாண்டு கொண்டாட புதுவைக்கு வரவேண்டாம்- சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் எச்சரிக்கை

    புத்தாண்டு கொண்டாட தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம் என்று சுற்றுலா பயணிகளுக்கு கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்துவதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

    அதே நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி புத்தாண்டு கொண்டாட்டம் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றி உறுதியாக நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

    கவர்னர், முதல்-அமைச்சர் தரப்பு மோதலால் சர்ச்சை அதிகரித்தது. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் என்று அரசின் முடிவை முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

    அவர் பேட்டி அளித்த பிறகு வாட்ஸ்-அப்பில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    புத்தாண்டை குடும்பத்துடன், வீட்டிலிருந்து கொண்டாடுங்கள். கொரோனா சூப்பர் பரவலின் ஒரு பகுதியாக இருக்காதீர்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

    தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு யாரும் வரவேண்டாம். புத்தாண்டு கொண்டாட்டங்கள் எங்கும் அனுமதிக்கப்படவில்லை.

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொரோனாவை சூப்பர் பரவலாக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களை எச்சரித்துள்ளது.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி பதிவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×