search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று எதிரொலி- புதுவையில் சர்வதேச யோகா விழா ரத்து

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சர்வதேச யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் 1992-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இந்த யோகா திருவிழாவில் பங்கேற்பார்கள். ஆண்டு தோறும் ஜனவரி 4 முதல் 7-ந்தேதி வரை இந்த திருவிழா புதுவையில் நடத்தப்படும்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் யோக தெரபி, யோகா உணவு, மாணவர்களுக்கான போட்டிகள் என நகரின் பல்வேறு பகுதியில் இந்த திருவிழா நடத்தப்படும். 27-வது சர்வதேச யோகா திருவிழா இந்த ஆண்டு வருகிற 4-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.

    இதுதொடர்பான கோப்பு சுற்றுலாத்துறையில் இருந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னும் ஒரு வார காலமே அவகாசம் உள்ளதால் 27-வது சர்வதேச யோகா திருவிழா அடுத்த மாதம் (ஜனவரி) நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு சர்வதேச யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுனாமி தாக்குதல், தானே புயல் தாக்குதலின்போது உலக யோகா திருவிழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×