என் மலர்
செய்திகள்

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக அடைக்கப்பட்டுள்ள கடைகள்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சிவகங்கையில் கடைகள் அடைப்பு
சிவகங்கையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை.
சிவகங்கை:
மதுரை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரமுகர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, சமயநல்லூர், ஊமச்சிக்குளம், சோழ வந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
மதுரை நகர் பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறந்து இருந்தன. மதுரை நகர் பகுதிகளை தவிர்த்து புறநகர் பகுதிகளில் அதிகளவில் கடைகள் அடைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள், விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் இன்று காலை 6 மணிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் 100 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
வழக்கம்போல் விருதுநகர் மாவட்டம் இன்று சுறுசுறுப்பாக இயங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை நகரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்கவில்லை. எனவே குறைந்த அளவு ஆட்டோக்களே ஓடின. அங்கு இன்று காலை முதல் மழை பெய்துவருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
ராமநாதபுரம் நகரில் இன்று வழக்கம் போல் கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோக்கள் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரம் மாவட்டத்தில் தொண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மதுரை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்க பிரமுகர்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதனால் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, சமயநல்லூர், ஊமச்சிக்குளம், சோழ வந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
மதுரை நகர் பகுதிகளில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறந்து இருந்தன. மதுரை நகர் பகுதிகளை தவிர்த்து புறநகர் பகுதிகளில் அதிகளவில் கடைகள் அடைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள், விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் இன்று காலை 6 மணிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. நகரில் 100 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
வழக்கம்போல் விருதுநகர் மாவட்டம் இன்று சுறுசுறுப்பாக இயங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகங்கை நகரில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்கவில்லை. எனவே குறைந்த அளவு ஆட்டோக்களே ஓடின. அங்கு இன்று காலை முதல் மழை பெய்துவருவதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
ராமநாதபுரம் நகரில் இன்று வழக்கம் போல் கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோக்கள் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இருப்பினும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரம் மாவட்டத்தில் தொண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
Next Story






