என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் முருகனுக்கு ஆயுர்வேத சிகிச்சை
Byமாலை மலர்4 Sep 2020 9:07 AM GMT (Updated: 4 Sep 2020 9:07 AM GMT)
பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை:
தமிழக பா.ஜனதா தலைவராக இருப்பவர் எல்.முருகன். இவர் கடந்த சில நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத டாக்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றனர். இதையடுத்து எல்.முருகன் கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத் தலைவர் எல்.முருகன் சிகிக்சைக்கு மத்தியிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர். சேகர், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், ராகவன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் அரசியல் கூட்டணி வியூகம், சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் விதம், வேட்பாளருக்கான தகுதிகள், தேர்தல் நிதி திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன.
தமிழக பா.ஜனதா தலைவராக இருப்பவர் எல்.முருகன். இவர் கடந்த சில நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத டாக்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அவர்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றனர். இதையடுத்து எல்.முருகன் கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத் தலைவர் எல்.முருகன் சிகிக்சைக்கு மத்தியிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பா.ஜனதா பொருளாளர் எஸ்.ஆர். சேகர், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், ராகவன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் அரசியல் கூட்டணி வியூகம், சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் விதம், வேட்பாளருக்கான தகுதிகள், தேர்தல் நிதி திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X