என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி: முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்ட மாணவர்
Byமாலை மலர்13 Aug 2020 3:34 AM GMT (Updated: 13 Aug 2020 3:34 AM GMT)
10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் பேஸ்புக் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டுமன்னார்கோவில் :
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடக்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டது.
இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சியைபெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவன், தன்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் புகைப்படம் வெளியிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியை சேர்ந்த மாணவர் நிஷாந்த், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ‘10-ம் வகுப்பு தேர்வில் என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அப்போது நடக்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக ரத்து செய்யப்பட்டது.
இதனால் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த 10-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சியைபெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவன், தன்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து முகநூலில் புகைப்படம் வெளியிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடியை சேர்ந்த மாணவர் நிஷாந்த், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் ‘10-ம் வகுப்பு தேர்வில் என்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும், என்னை பார்த்து ஏளனமாக சிரித்த ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X