search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரைமுருகன்
    X
    துரைமுருகன்

    தமிழக அரசு புதிய பட்ஜெட் போட வேண்டும்- துரைமுருகன்

    தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்திலேயே கொரோனாவை கிள்ளி எறியும் காரியத்தை இந்த அரசு செய்யவில்லை. மார்ச் ஆரம்பத்திலேயே நாங்கள் அரசாங்கத்தை எச்சரித்தோம். ஆனால் வியாதியை பற்றி அமைச்சர்களுக்கு தெரியவில்லை.

    இந்த ஆட்சி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. எனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம், உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டியது அ.தி.மு.க. அரசுதான்.

    தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை. ஏனென்றால் பட்ஜெட்டுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் செலவுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் வாங்குவதைவிட ஒரு புதிய பட்ஜெட் போடலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×