என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 2 பேர் வெட்டிக்கொலை - 20 பேர் கும்பல் வெறிசெயல்
பண்ருட்டியில் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 2 பேரை 20 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23), சிற்பி. இவரது நண்பர் பாலாஜி (வயது 22). தச்சுத் தொழிலாளி.
நேற்று இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவருடன் பாலாஜியும் சென்றார். தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும் அவர்கள் 2 பேரும் அங்குள்ள பம்ப் செட்டில் இருந்து செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் மணிகண்டன், பாலாஜி ஆகியோர் இருந்த வயல்வெளிக்கு சென்றனர். அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பதட்டம் நிலவியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், தேர்தல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
கொலையுண்ட மணிகண்டன், பாலாஜி ஆகிய 2 பேரும் பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் உள்ளாட்சி தேர்தலின்போது தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களுக்கும், கொலை செய்யப்பட்ட 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். ஆனாலும், இந்த முன்விரோதம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது கொலையில் முடிந்துள்ளது.
பண்ருட்டி திருவதிகை சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23), சிற்பி. இவரது நண்பர் பாலாஜி (வயது 22). தச்சுத் தொழிலாளி.
நேற்று இரவு 11.30 மணியளவில் மணிகண்டன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அவருடன் பாலாஜியும் சென்றார். தண்ணீர் பாய்ச்சி முடிந்ததும் அவர்கள் 2 பேரும் அங்குள்ள பம்ப் செட்டில் இருந்து செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில் 20-க்கும் மேற்பட்ட கும்பல் மணிகண்டன், பாலாஜி ஆகியோர் இருந்த வயல்வெளிக்கு சென்றனர். அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தால் பண்ருட்டி பகுதியில் பதட்டம் நிலவியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், தேர்தல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.
கொலையுண்ட மணிகண்டன், பாலாஜி ஆகிய 2 பேரும் பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்யாபன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள். இவர்கள் உள்ளாட்சி தேர்தலின்போது தீவிரமாக வேலை பார்த்து வந்தனர். அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத் ஆதரவாளர்களுக்கும், கொலை செய்யப்பட்ட 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே போலீசார் தலையிட்டு சமரசம் செய்தனர். ஆனாலும், இந்த முன்விரோதம் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருந்தது. தற்போது இது கொலையில் முடிந்துள்ளது.
Next Story






