என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்
    X
    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்

    கோபியில் விறகு கட்டையால் தொழிலாளி அடித்து கொலை - 2 பேர் கைது

    கோபியில் மனைவியை தரக்குறைவாக பேசியதால் தொழிலாளியை விறகு கட்டையால் அடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பம் மணப்பேட் ரோட்டை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே தண்ணீர் பந்தல் புதூரில் உள்ள ஒரு தனியார் பேப்பர் மில்லில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சம்பளப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் தான் தங்கியிருந்த அறையில் வந்து தூங்கினார். அந்த மில்லில் பணிபுரியும் இரவு நேர காவலர்கள் குமார் தங்கியிருந்த அறை வழியாகச் சென்றபோது குமார் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ஊழியர்கள் வந்து குமாரை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. குமார் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து மில் மேலாளர் கோபி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தாவல் தெரிய வந்தது. குமாருக்கும் அதை மில்லில் வேலை பார்க்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் குமார் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குமார் அறையில் தங்கி இருந்தவர்களிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

    குமாருடன் தங்கி இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிசி சேர்ந்த பெலிக்ஸ்ஸ் பிரவின் மனைவி பற்றி குமார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பெலிக்ஸ் பிரபு மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிநாத் இருவரும் விறகு கட்டையால் குமாரை தாக்கினர்.

    இதில் பலத்த அடிபட்டு குமார் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோபி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×