என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டி - உதயநிதி ஸ்டாலின்
Byமாலை மலர்16 Nov 2019 4:31 AM GMT (Updated: 16 Nov 2019 4:31 AM GMT)
தலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்று திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அரியலூர்:
நீட் தேர்வால் அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக குழுமூரில் அனிதா படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நூலகத்தை சுற்றிப்பார்த்த அவர், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்தார். முன்னதாக அனிதா நூலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
அப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தலைமை அறிவித்தால் போட்டியிட தயாராக உள்ளேன் என்றார்.
நீட் தேர்வால் அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக குழுமூரில் அனிதா படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நூலகத்தை சுற்றிப்பார்த்த அவர், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்தார். முன்னதாக அனிதா நூலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நீட் எதிர்ப்பு போராளி அனிதா நினைவு நூலகத்திற்கு தி.மு.க.வினர் தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளனர். அனிதா சகோதரர் மணிரத்னம் கேட்டுக்கொண்டதன் காரணமாக நூலகத்தில் தேவையான புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்துள்ளேன் என்றார்.
அப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தலைமை அறிவித்தால் போட்டியிட தயாராக உள்ளேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X