search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறைச்சியை நாய்கள் தின்னும் வீடியோ காட்சி
    X
    இறைச்சியை நாய்கள் தின்னும் வீடியோ காட்சி

    குன்னூரில் விற்பனைக்கு கொண்டு சென்ற இறைச்சியை நாய்கள் தின்னும் காட்சியால் பரபரப்பு

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் விற்பனைக்கு கொண்டு சென்ற இறைச்சியை நாய்கள் தின்னும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடு, கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன.

    இங்கு ஏராளமான மக்கள் வந்து இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். இந்த கடைகளுக்கு குன்னூர் டி.டி.கே.சாலை பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    சம்பவத்தன்று இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகளை அறுத்து 200 கிலோ இறைச்சியை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் பணியாளர்கள் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் ஆட்கள் உள்ளே சென்றதும் ஆட்டோவில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை தின்று கொண்டிருந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து ஏற்றப்படும் இறைச்சிகளை நாய்கள் சாப்பிடுகின்றன. அதன்பின்னர் அந்த இறைச்சிகள் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இது தெரியாமல் மக்கள் வாங்கி சென்று சாப்பிடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த கறிகளை எலிகள் கடித்து தின்னும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து 700 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சுகாதாரமற்ற முறையில் கடையை வைத்திருந்த கடைக்கு சீல் வைத்து சென்றனர். தற்போது இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து ஆட்டோவில் ஏற்றப்படும் கறிகளை நாய்கள் சாப்பிடும் காட்சி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×