என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்13 Aug 2019 7:07 AM GMT (Updated: 13 Aug 2019 7:07 AM GMT)
ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் விஷ வாயு தாக்கி தொழிலாளி இறந்தார். மேலும் மயக்கமடைந்த 4 பேர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் (வயது 27), பூட்டுதாக்கு ராஜா (38), ராணிப்பேட்டை சுகேந்தர் (29), சத்திரம்புதூர் உதயகுமார் (48), வாணாபாடி மாரிமுத்து ஆகிய 5 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பைப்பில் இருந்து திடீரென விஷ வாயு வெளியானது. அதை சுவாசித்த சுகேந்தர் மயங்கி விழுந்தார். இதனை கண்ட மற்ற 4 பேரும் அவரை மீட்க முயன்றனர். அப்போது அவர்களும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த காவலாளி அனைவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் அனைவரையும் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் பரிதாபமாக இறந்தார். மயக்கமடைந்த மற்ற தொழிலாளிகள் ராஜா, ராணிப்பேட்டை சுகேந்தர், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் கெமிக்கல் கம்பெனி இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் (வயது 27), பூட்டுதாக்கு ராஜா (38), ராணிப்பேட்டை சுகேந்தர் (29), சத்திரம்புதூர் உதயகுமார் (48), வாணாபாடி மாரிமுத்து ஆகிய 5 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பைப்பில் இருந்து திடீரென விஷ வாயு வெளியானது. அதை சுவாசித்த சுகேந்தர் மயங்கி விழுந்தார். இதனை கண்ட மற்ற 4 பேரும் அவரை மீட்க முயன்றனர். அப்போது அவர்களும் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்தனர்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த காவலாளி அனைவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் அனைவரையும் மீட்டு ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகேந்தர் பரிதாபமாக இறந்தார். மயக்கமடைந்த மற்ற தொழிலாளிகள் ராஜா, ராணிப்பேட்டை சுகேந்தர், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X