என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகநூல் மூலம் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்
Byமாலை மலர்8 Aug 2019 3:14 AM GMT (Updated: 8 Aug 2019 3:14 AM GMT)
ஒரு திருநங்கையும், வாலிபரும் முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
நெல்லிக்குப்பம்:
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, திருமணம் செய்து கொண்டது பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
அதேபோல் ஒரு திருநங்கையும், வாலிபரும் முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலைக்கரையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 22). திருநங்கையான இவருக்கு, முகநூல் (பேஸ்புக்) மூலம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த லட்சுமணன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது.
மும்பையில் சினிமா படத்திற்கு ‘செட்’ அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த லட்சுமணன், திருநங்கை அமிர்தாவை காதலிப்பது பற்றி பெற்றோருக்கு தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.
இதுகுறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்சி. வரை படித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் இருந்தேன். அப்போது முகநூல் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த நாங்கள், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.
கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து, நாங்கள் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தோம். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால் நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.
இதுகுறித்து மணமகன் லட்சுமணன் கூறுகையில், நாங்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். முதலில் எனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி, அமிர்தாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் வாங்கி, திருமணம் செய்துகொண்டேன் என்றார்.
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியால் பலர் முகநூல், வாட்ஸ்-அப் போன்றவை மூலம் ஒருவரையொருவர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, திருமணம் செய்து கொண்டது பற்றி நாம் அறிந்திருக்கிறோம்.
அதேபோல் ஒரு திருநங்கையும், வாலிபரும் முகநூல் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் கடலூரில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலைக்கரையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 22). திருநங்கையான இவருக்கு, முகநூல் (பேஸ்புக்) மூலம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த லட்சுமணன்(27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது.
மும்பையில் சினிமா படத்திற்கு ‘செட்’ அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த லட்சுமணன், திருநங்கை அமிர்தாவை காதலிப்பது பற்றி பெற்றோருக்கு தெரிவித்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை திருநங்கை அமிர்தாவும், லட்சுமணனும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்சி. வரை படித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் இருந்தேன். அப்போது முகநூல் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த நாங்கள், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.
கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து, நாங்கள் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தோம். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடத்த முடிவுசெய்தோம். ஆனால் நாங்கள் கோவிலில் திருமணம் செய்வதற்கு, கோவில் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து, அனுமதி பெற்று கோவிலில் திருமணம் செய்துகொண்டோம் என்றார்.
இதுகுறித்து மணமகன் லட்சுமணன் கூறுகையில், நாங்கள் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். முதலில் எனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி, அமிர்தாவை திருமணம் செய்வதற்கு சம்மதம் வாங்கி, திருமணம் செய்துகொண்டேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X