என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கத்தியால் குத்திய வாலிபர் கைதாகிறார்
டிஎன்.பாளையம்:
டிஎன்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பாரதி வீதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் தனது மனைவி அன்னக்கொடி (37) மகன் மவுலிதரனுடன் வசித்து வருகிறார்.
தேவராஜின் சகோதரர் சரவணன் (39) தனது தாயுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், அன்னக்கொடியின் கொழுந்தனார் சரவணன் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக பேசி வருவதாக தனது கணவர் தேவராஜிடம் கூறினார்.
தேவராஜ் தனது தம்பி சரவணனிடம் இது குறித்து கண்டித்து திட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் தேவராஜ் தனது மாமியார் வீடான கவுந்தப்பாடி வேலம்பாளையத்திற்கு மனைவி மற்றும் மகனையும் அனுப்பி வைத்தார்.
அன்னக்கொடி தனது அம்மா வீட்டிலிருந்து கொண்டே மகனை கள்ளிப் பட்டி அருகே உள்ள வரப்பள்ளம் தனியார் பள்ளிக்கு அனுப்பி வைத்து கூட்டி வந்தார்.
இதையறிந்த சரவணன் சம்பவத்தன்று மாலை வரப்பள்ளம் பஸ்டாப் அருகே காத்திருந்தார்.
பள்ளியில் இருந்து தனது மகனை வீட்டிற்கு கூட்டி செல்ல வரப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்த அன்னக்கொடியை சரவணன் திட்டியவாறே தான் மறைத்து வைத்திருந்து சூரிக்கத்தியால் வயிறு, மார்பு பகுதி, தோல்பட்டை, முதுகு என மாறி மாறி சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை எதிர்பாராத அன்னக்கொடி படுகாயம் அடைந்தார்.
சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்த சரவணன் தன்னை தானே குத்திக் கொண்டு தனது பைக்கில் சென்று விட்டார்.
அருகில் இருந்தவர்கள் தேவராஜ்க்கு தகவல் கொடுத்து 108-ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக அன்னகொடி கோவை தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரவணனும் சிகிச்சை பெற்று வருவதால் விரைவில் சரவணன் கைது செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்