search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிர்ஆனந்த்
    X
    கதிர்ஆனந்த்

    வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சொத்து மதிப்பு

    வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தற்போது மொத்தம் ரூ.58.75 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அவரது மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோரது பெயர்களில் மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கதிர் ஆனந்த்திடம் மொத்தம் ரூ.14 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 870 மதிப்பிலும், அவரது மனைவியிடம் ரூ.2 கோடியே 54 லட்சத்து 32 ஆயிரத்து 618 மதிப்பிலும், மகள் செந்தாமரை பெயரில் ரூ.31 லட்சத்து 96 ஆயிரத்து 684 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் உள்ளன.

    இதில் கதிர் ஆனந்த் பெயரில் கையிருப்பாக பணம் ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்து 16, அவரது மனைவி பெயரில் ரூ.8 லட்சத்து 83 ஆயிரத்து 879, கதிர் ஆனந்த் பெயரில் ரூ.65 லட்சத்து 25 ஆயிரத்து 437 மதிப்பிலான நகைகளும், அவரது மனைவி பெயரில் ரூ.27 லட்சத்து 18 ஆயிரத்து 637 மதிப்பிலும், மற்றவை வங்கியிருப்பு, பங்கு பத்திரங்களில் முதலீடு, காப்பீட்டு முதலீடு, நகைகளும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    கதிர் ஆனந்த் பெயரில் ரூ.26 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரத்து 618 மதிப்பிலும், அவரது மனைவி பெயரில் ரூ.14 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 661 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா

    கதிர் ஆனந்தின் மனைவி பெயரில் மட்டும் ரூ.33 லட்சத்து 7 ஆயிரத்து 588 மதிப்பிலான கடன் இருப்பதாக அவரது வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கதிர் ஆனந்த் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், தனது குடும்பத்துக்கு மொத்தம் ரூ.57 கோடியே 24 லட்சத்து 94 ஆயிரத்து 163 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் 3 மாதங்களில் அவரது குடும்ப சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 288 உயர்ந்து தற்போது மொத்தம் ரூ.58 கோடியே 75 லட்சத்து 79 ஆயிரத்து 451 மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் இருப்பதாக நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×