search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சமடைந்த காதல் ஜோடி
    X
    தஞ்சமடைந்த காதல் ஜோடி

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை கொட்டையூரை சேர்ந்தவர் நிவேதா (வயது 23). இவரும் சின்னபொன்னேரியை சேர்ந்த பனிபிரியன் (26) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 2-ந்தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி இன்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இருவரது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×