என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டீ தயாரித்து, காலணிகளுக்கு பாலீஷ் போட்டு வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்
Byமாலை மலர்29 March 2019 4:58 AM GMT (Updated: 29 March 2019 4:58 AM GMT)
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #MansoorAlikhan
கொடைக்கானல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அவரே தராசு பிடித்து பொதுமக்களுக்கு காய்கறி வழங்கினார். திண்டுக்கல் நகர் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்து கரும்பு விவசாயிக்கு ஓட்டு போடுங்க. மற்றவங்களுக்கு ஓட்டு போட்டா வேட்டு வச்சிருவாங்க என்று பிரசாரம் செய்தார்.
நேற்று கொடைக்கானல் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஏரிச்சாலை, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரே பிரசாரம் செய்தார். அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம், செவன்ரோடு, கே.சி.எஸ். திடல் ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டார்.
டீக்கடைக்குள் சென்ற அவர் டீ தயாரித்து எனக்கு ஓட்டு போடுங்கள். இதை விட நல்ல டீயாக தருகிறேன் என்று தமாசாக பேசினார். அங்கு நின்றவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர். மூஞ்சிக்கல் பகுதிக்கு சென்ற அவர் செருப்பு தைக்கும் கடைக்கு சென்று பொதுமக்களின் காலணிகளுக்கு பாலீஷ் போட்டு ஆதரவு கோரினார்.
இது குறித்து அவர் கூறுகையில் நாம் தமிழ் கட்சியை பலர் கூட்டணிக்கு அழைத்தனர். நாங்கள் செல்லவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் ஆளுங்கட்சியினர் பின்னர் எதையும் நிறைவேற்றுவதில்லை. மத்தியில் தமிழர் ஆள வேண்டும். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் நான் நல்லது செய்ய மாட்டேன். சினிமாவில் வில்லனாகத்தான் நடித்தேன். அது போலதான் செயல்படுவேன் என்றார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #MansoorAlikhan
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மன்சூர்அலிகான் மக்களை கவரும் வகையில் வாக்கு சேகரித்து வருகிறார். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அவரே தராசு பிடித்து பொதுமக்களுக்கு காய்கறி வழங்கினார். திண்டுக்கல் நகர் பகுதியில் தெருக்களை சுத்தம் செய்து கரும்பு விவசாயிக்கு ஓட்டு போடுங்க. மற்றவங்களுக்கு ஓட்டு போட்டா வேட்டு வச்சிருவாங்க என்று பிரசாரம் செய்தார்.
நேற்று கொடைக்கானல் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஏரிச்சாலை, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரே பிரசாரம் செய்தார். அதன் பின்னர் இரு சக்கர வாகனத்தில் பஸ் நிலையம், செவன்ரோடு, கே.சி.எஸ். திடல் ஆகிய பகுதிகளில் ஓட்டு கேட்டார்.
டீக்கடைக்குள் சென்ற அவர் டீ தயாரித்து எனக்கு ஓட்டு போடுங்கள். இதை விட நல்ல டீயாக தருகிறேன் என்று தமாசாக பேசினார். அங்கு நின்றவர்கள் அனைவரும் வாய் விட்டு சிரித்தனர். மூஞ்சிக்கல் பகுதிக்கு சென்ற அவர் செருப்பு தைக்கும் கடைக்கு சென்று பொதுமக்களின் காலணிகளுக்கு பாலீஷ் போட்டு ஆதரவு கோரினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X