search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்.
    X
    திண்டுக்கல் நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்.

    துப்புரவு பணி செய்து வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

    திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளி செல்லும் சாலையில் துப்புரவு பணியாளர்கள் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து குப்பைகளை அகற்றி மன்சூர் அலிகான் வாக்கு சேகரித்தார். #LokSabhaElections2019 #MansoorAliKhan
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாவட்டத்தின் பல பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார்.

    குறிப்பாக விவசாய தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களையும், காய்கறி சந்தையில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்கு கேட்டு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தினந்தோறும் ஒவ்வொரு பகுதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    அதன்படி திண்டுக்கல் அண்ணாமலையார் பள்ளி செல்லும் சாலையில் துப்புரவு பணியாளர்கள் வைத்திருந்த துடைப்பத்தை எடுத்து குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். தெரு முழுவதும் இருந்த குப்பைகளை அள்ளி வண்டியில் கொட்டினார்.

    தாமதமாக வந்த துப்புரவு பணியாளர்களிடம் எத்தனை மணிக்கு பணிக்கு வருகிறீர்கள்? என கண்டித்தார். அதனை தொடர்ந்து தெருவோரம் இருந்த வியாபாரிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறு நகைச்சுவையுடன் கூறிச்சென்றார்.   #LokSabhaElections2019 #MansoorAliKhan
    Next Story
    ×