search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயபுரத்தில் கியாஸ் கம்பெனி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை மாயம்
    X

    ராயபுரத்தில் கியாஸ் கம்பெனி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை மாயம்

    ராயபுரத்தில் கியாஸ் கம்பெனி ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    ராயபுரம் கிரேஸ் கார்டன் 5-வது தெருவை சேர்ந்தவர் நதியா. இவரது கணவர் கியாஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று மாலை நதியா உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.

    அப்போது நகைகளை எடுக்க பீரோவை திறந்தார். ஆனால் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மற்றொரு பீரோவில் இருந்து 15 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் பணம் அப்படியே இருந்தது.

    இதுகுறித்து நதியா ராயபுரம் போலீசில் புகார் செய்தார். பீரோவை உடைக்காமல் நகைகள் திருடப்பட்டு இருப்பதால் நன்கு தெரிந்த நபர்கள்தான் கைவரிசையில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    Next Story
    ×