search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியான பாஸ்கர்.
    X
    பலியான பாஸ்கர்.

    சத்தியமங்கலம் அருகே வேன் மோதி தந்தை-மகன் பலி

    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பார்வதி நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 43). லாரி டிரைவர் மனைவி பெயர் மல்லிகா (24). மைதிலி (8) என்ற ஒரு மகளும் பிரதீப்குமார் (6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று இரவு 9.15 மணியளவில் பாஸ்கர் தனது மகனுடன் சத்தியமங்கலம் சென்று விட்டு சிக்கரசம்பாளையம் சென்று கொண்டிருந்தார்.

    சத்தியமங்கலம் அருகே கள்ளுக்கடை பிரிவில் வந்தபோது தாளவாடியிலிருந்து திருப்பூர் நோக்கி காய்கறிகள் ஏற்றி கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது.

    இதில் இருவருக்கும் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் பலியான தந்தை-மகன் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×